Saturday, September 22, 2012

வெற்றிலை..!




மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் தாவரங்களில் வெற்றிலையும் ஒன்றாகும்.
இந்தியாவில் மிதவெப்ப மற்றும் குளிர்ச்சியான பகுதிகளில் வெற்றிலை வளர்க்கப்படுகிறது. வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு மும்பை போன்ற இடங்களில் இதன் இலைக்காக பயிரிடப்படுகிறது.
வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.

கெடினின், சாவிகால், பைரோ கெடிசால், யூஜினால், எக்ஸ்ட்ராகால், ஆக்சாலிக் அமிலம் போன்ற பல வேதிப்பொருள் வெற்றிலையின் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளது.
இலைகளும், வேர்களும் மருத்துவ பயன் உடையவை. இலைகளில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய் மூச்சுக்குழல் நோய்களுக்கு மருந்தாகிறது. இலையின் சாறு ஜீரணத்திற்கு உதவுகிறது. வேர்பகுதி பெண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது.

அரை டம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி,சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.

இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.


நன்றி: தமிழரசி
Download As PDF

Sunday, September 09, 2012

ஹைக்கூ கவிதை


மன்னிப்பு

எல்லா குற்றங்களையும்
மன்னிக்கும் ஒரே நீதிமன்றம்
அம்மாவின் இதயம்..

பிரிவு

உடல்களுக்கிடையே தொலைவை
அதிகரித்து
மனங்களை நெருக்கமாக்கும்
ஒரு பாலம்

வாழ்க்கை

தாய்க்குப்பின்...
தாரம்!
தாரத்துக்குப் பின்...
ஓரம்!

டாஸ்மார்க்

மது
நாட்டுக்கு வருவாய்,
வீட்டுக்கு செலவாய்,
டாஸ்மார்க்

விழிநீர் சேகரிப்புத் திட்டம்!

கவித்துவா (எ) பிரகல்யா
சோகங்கள் தரும் அழுகைத் துளிகளை சேமித்து வை.....
சந்தோசம் தரப் போகும் "ஆனந்த கண்­ணீருக்காக"!!

இறப்பு

வித்தகன்
இயந்திர உலகில்
நிரந்தர தூக்கம்!

சொந்த பந்தம்

ரகுமா ரிப்னஸ்
உன் பாக்கெட்டில் காசு இருக்கும் வரை
கூடவே இருக்கும் ஊழல்கள்....

சிரிப்பு

ஆர்.ஈஸ்வரன், வெள்ளகோவில்
மருத்துவம் இல்லை
வலி தீர்ந்தது
மழலையின் சிரிப்பு

சுத்தம்

ஆ.முத்துவேல்
சுனாமியே வா,
என்னை சுத்தப்படுத்து,
கூவம் ஆறு...

முதியோர் இல்லம்!

கவித்துவா (எ) பிரகல்யா
விழுதுகள் விரட்டி அடித்ததால் ...
ஆல மரங்கள் அடைக்கலம் புகுந்தன!!

வியர்வை

கூடல்
உள்ளேயே இருந்தால் சோம்பல்,
வெளியேறினால் உழைப்பு,
தொழிலாளியின் வியர்வை........

நம்பிக்கை உள்ளவரை!

கே.கே
கடவுளும், காதலும் - உண்மை
அதன்மேல் நம்பிக்கை உள்ளவரை!

வெங்காயம்

ஓ.எஸ்.பாலாஜி
அழ வைப்பதில் என்னை மிஞ்சிவிட்டனரே!
மெகாசீரியல்களை எண்ணி கண்ணீர் வடித்தது
வெங்காயம்...

ஆண்டவன்

மாயாண்டி சந்திரசேகரன்
அன்று
நின்று கொன்றவன்
இன்று செய்வதறியாது
நின்று கொண்டான்
Download As PDF

Saturday, September 01, 2012

உள்ளம் தூய்மை பெற வழி-(அதிவீரராமபாண்டியன்)


* வானம், நெருப்பு, நீர், காற்று, மண் என்கின்ற பஞ்ச
பூதங்களுக்கு அமைந்த முக்குணங்களும், அந்த கரணங்கள்
நான்கும் ஆகிய இவை முதலிய யாவுமாய், தனக்கு
ஆதியுமில்லாமல், அந்தமுமில்லாமல், உடலுக்கு உயிராய்,
உயிருக்கு உணர்ச்சியாய் ஒன்றினும் தோய்வின்றி நிற்பவனே
அறிவுமயமான ஆண்டவன்.<BR>
* ஆண்டவனை வணங்கத் தலை இருக்கிறது. வாழ்த்த வாய்
இருக்கிறது. மனமும் இருக்கிறது. ஆனால், அந்த மனம்
கட்டுக்கடங்காமல் திரியும் காட்டுக் குரங்கினைப் போன்றது.
ஆகவே, இறைவனை எப்போதும் எண்ணிக்கிடக்க இறைவனடியார்களிடம்
எக்காலத்தும் பழகியிருக்க வேண்டும்.
* இறைவனை வழிபட்டால் உள்ளம் தூய்மை பெறும். உள்ளம்
தூய்மையடைபவன் செல்வத்தைப் பெறுவான். சிறப்பினைப்
பெறுவான். அல்லலைத் தவிர்ப்பான். அறிவு நிரம்பப் பெறுவான்.
கல்வியில் சிறந்து விளங்குவான். நற்கதி அடைவான்.
* தாம் விரும்பியதை முன்னமேயே பெற்றுக் கையில்
வைத்திருக்க, அதைப் புரிந்துகொள்ளாமல் விரும்பியது இன்னும்
கிடைக்கவில்லையே என்று வருந்துகிறவனைப் போல், படைத்த
பரமனின் அருளைப் பெற்றும் பெறாதவர் போல் அறியாமல்
வருந்துகிறவர்கள் அநேகர் உண்டு.
* ஆணவ மலத் துன்பத்தில் அழுந்திய மன ஆசையினால் அறிவு
மயங்குபவன், வெவ்வேறு உருவமாகப் பிறந்து குயவன் சுழற்றும்
சக்கரத்தைப் போலப் பிறவிக் கடலில் சுழன்று கிடப்பான்.
* செம்பில் களிம்பு போல் மலமானது ஆத்மாவை ஆதிமுதலே
பற்றிக் கொண்டிருக்கும்.
* பொன்னை விரும்புதல், பூமியை விரும்புதல், பெண்
மயக்கத்தை விரும்புதல் ஆகியவை ஒருவனுடைய மனவலிமையை
அயர்வுறச் செய்வனவாகும்.
Download As PDF