இணையத்தில் படித்ததும் பதிந்ததும்!!!
சின்னதும், பெரியதுமாய்
அளவுகளில் மட்டுமே
வித்தியாசப்பட்டு,
அனைவருக்குள்ளும்
விரவிக் கிடக்கிறது ஆசைகள்!
ஆசைப்பட்டதை
அடையும் அருகதை,
இருக்கிறதோ, இல்லையோ
ஆனாலும்,
ஆசைப்பட அருகதை தேவையில்லை!
பெண்ணின் மீது ராவணனும்,
மண்ணின் மீது துரியோதனனும்
ஆசைப்படாது போயிருந்தால்...
இரு பெரும் காவியங்களேது!
முற்றும் துறந்த போதும்,
விட்டு வைத்ததா ஆசை
விசுவாமித்திரரை!
துன்பத்திற்கு காரணமாகவும்,
அனுபவங்களுக்கு ஆதாரமாகவும்
நல்லதும், கெட்டதும்
ஆசைகளின்றி
சிருஷ்டிக்கப்படவில்லை
இப்பிரஞ்சம்!
— கா.இளையராஜா, விருத்தாசலம்.
Download As PDF
சின்னதும், பெரியதுமாய்
அளவுகளில் மட்டுமே
வித்தியாசப்பட்டு,
அனைவருக்குள்ளும்
விரவிக் கிடக்கிறது ஆசைகள்!
ஆசைப்பட்டதை
அடையும் அருகதை,
இருக்கிறதோ, இல்லையோ
ஆனாலும்,
ஆசைப்பட அருகதை தேவையில்லை!
பெண்ணின் மீது ராவணனும்,
மண்ணின் மீது துரியோதனனும்
ஆசைப்படாது போயிருந்தால்...
இரு பெரும் காவியங்களேது!
முற்றும் துறந்த போதும்,
விட்டு வைத்ததா ஆசை
விசுவாமித்திரரை!
துன்பத்திற்கு காரணமாகவும்,
அனுபவங்களுக்கு ஆதாரமாகவும்
நல்லதும், கெட்டதும்
ஆசைகளின்றி
சிருஷ்டிக்கப்படவில்லை
இப்பிரஞ்சம்!
— கா.இளையராஜா, விருத்தாசலம்.